×

குவாரிக்குள் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி


திருப்பூர், அக்.5: திருப்பூர் அருகே கல் குவாரிக்குள் லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிபட்டி புதூரை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் முனுசாமி (21). இவர், திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே இச்சிப்பட்டி தாம்மூச்சிபாளையம் பகுதியில் உள்ள தங்கவேல் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் டிப்பர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று இந்த குவாரியில் இருந்து டிப்பர் லாரியில் கற்களை ஏற்றிக்கொண்டு முனுசாமி ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து குவாரிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் லாரியின் கேபின் தனியாகவும், கற்களை ஏற்றி சென்ற கேபின் தனியாகவும் கழன்று விழுந்தன.  இதில், லாரியின் அடியில் முனுசாமி சிக்கிக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்லை பலனின்றி முனுசாமி இறந்தார்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...