×

வன வார விழா நிறைவு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

உடுமலை, அக்.5:வன வார விழாவையொட்டி, ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் கடந்த மாதம் மாணவ மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வன பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனருமான கணேஷ் தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் அசோகன், தளி இன்ஸ்பெக்டர் சிவகுமார், உடுமலை வனச்சரகர் தனபாலன், அமராவதி வனச்சரகர் மாரியப்பன், திருப்பூர் வனச்சரகர் மகேஷ் மற்றும் வன காப்பாளர்கள், வன காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு