×

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை ரூ.14 ஆக நிர்ணயம்

மஞ்சூர்,அக்.5: பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவிற்கு ரூ.14 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேயிலை வாரிய செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.   தென்னிந்திய தேயிலை செயல் இயக்குனர் பால்ராசு வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு செப்டம்பர் மாதத்திற்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.14 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   இந்த விலையை அனைத்து தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேற்படி விலை வழங்காத தொழிற்சாலைகள் குறித்து விவசாயிகள் தேயிலை வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் இதுகுறித்து தேயிலை வாரியத்தின் வளர்ச்சி அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குனர்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...