×

மலம்புழா அணையிலிருந்து நீர் வெளியேற்றம்

பாலக்காடு,அக்.5: கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மலம்புழா அணையின் நீராதார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின்  நீர்மட்டம் 114.3 மீட்டராக உயர்ந்துள்ளது (முழுக்கொள்ளளவு 115.06 மீ). அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை முதல் 4 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மலம்புழா, கடுக்காம்குன்று, கல்பாத்தி, எடத்தரை மற்றும் பரளி, பாரதப்புழா ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் காரணமாக கடுக்காம்குன்று, பரளி ஆகிய பகுதிகளிலுள்ள தரை மட்ட பாலங்களில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது. இதனால் இவற்றில் வாகனப்போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி