×

குரங்குகள் அட்டகாசம் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

மஞ்சூர்,அக்.5: கரியமலை கிராமத்தில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   மஞ்சூர் அருகே உள்ளது கரியமலை. நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் தேயிலை விவசாயத்துடன் பட்டாணி, பீன்ஸ், அவரை, உருளைகிழங்கு, கேரட் உள்ளிட்ட பலவகையிலான மலைகாய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் நுாற்றுக்கணக்கான குரங்குகள் முற்றுகையிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.  விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர் செடிகளை அழித்து நாசம் செய்து வருவதுடன் இப்பகுதிகளில் திறந்து கிடக்கும் வீடுகளில் புகுந்து திண்பண்டங்களை துாக்கி செல்வதும், பொருட்களை வாரியிறைப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இதையடுத்து கரியமலை பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி