×

வடிகால் வசதி செய்ய கோரி மழைநீரில் நின்று கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், அக்,5: கீழ்க்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் வடிகால் வசதி செய்ய கோரி மழைநீரில் நின்று கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்த நிலையில், கீழகாவட்டாங்குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்ததால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் கிராமமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டது. சாலைமுழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யாரும் வெளியில் செல்லமுடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையை பற்றி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பது இக்கிராம மக்களின் குற்றச்சாட்டு ஆகும்.  இதனையடுத்து இக்கிராமமக்கள்  கொட்டும் மழையிலும் தண்ணீர் வடிகால் வசதி செய்துதர வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால்  சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டம் செய்யபோவதாக கிராம பெண்கள் எச்சரிக்கின்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...