×

பஸ் மோதி தொழிலாளி பலி

ஈரோடு, அக்.5:  ஈரோடு கருங்கல்பாளையம் பொன்னுசாமி வீதியை சேர்ந்த குணசேகரனின் மகன் சண்முகம்(31). இவர் ஈரோடு பகுதியில் இயங்கும் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, ஈரோடு மூலப்பட்டறை அடுத்த கேஎன்கே ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. ஈரோடு திருநகர் காலனி அருகே வந்தபோது அரசு பஸ்சும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சண்முகத்தை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை