×

பாறைக்குழியில் மூழ்கி பெயிண்டர் பலி

திருப்பூர், செப். 26: திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் குமார் (45). பெயிண்டர். இவருக்கு பழனியம்மாள் (39) என்ற மனைவியும், ராஜேஸ் (18) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வௌியே சென்ற குமார் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள பாறைக்குழியில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு  சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில், பாறைக்குழியில் இறந்து கிடந்தவர் பெயிண்டர் குமார் என்றும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாறைக்குழி பகுதிக்கு சென்ற அவர், அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED தெலுங்குபாளையம், செல்வபுரத்தில்...