×

கோயில் நிலத்தில் மண் கொள்ளை

உடுமலை, செப். 26:  உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அசோகன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், வட்டாட்சியர்கள் தங்கவேல் (உடுமலை), கலாவதி (மடத்துக்குளம்) மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கடந்த 2015-16ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வரவில்லை. அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகளும் ஒட்டுமொத்தமாக தெரிவித்தனர். பிஏபி கால்வாய் தண்ணீர் கடைமடை பகுதிக்கு இதுவரை வரவில்லை. இடையில் குழாய் போட்டு உறிஞ்சுகின்றனர். இதை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு என்ன செய்கிறது என்றே தெரியவில்லை என குற்றம்சாட்டினர்.

Tags :
× RELATED முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு