×

தலைமை தபால் நிலையத்தில் 28ம் தேதி குறைதீர் கூட்டம்

திருப்பூர், செப். 26: திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கோபிநாதன் கூறியிருப்பதாவது: திருப்பூர் தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம், திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் வரும் 28ம் தேதி நடக்கிறது. இதில், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் யோசனைகளை கடிதம் மூலமாக கோட்ட கண்காணிப்பாளருக்கு 27ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
கடித உறையின் மீது `குறைதீர்ப்பு கூட்டம்’ என்று தவறாமல் எழுத வேண்டும். கடிதங்களை சாதாரண தபால் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தெலுங்குபாளையம், செல்வபுரத்தில்...