×

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

உடுமலை, செப். 26: உடுமலை எலையமுத்தூர் சாலையில் பள்ளி மாணவர்களுக்கான விடுதி, கல்லூரி மாணவ மாணவியருக்கான மூன்று விடுதிகள், வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல பஸ்களையே நம்பி உள்ளனர். கல்லூரி துவங்கும் நேரத்திலும், முடியும் நேரத்திலும் போதுமான அளவு பஸ் வசதி இல்லை.கூடுதல் பஸ்களை  இயக்கும்படி கல்லூரி நிர்வாகம் சார்பில் பலமுறை அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அல்லது திருமூர்த்தி நகர், அமராவதி நகர் செல்லும் பஸ்களை கல்லூரி வழியாக இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை.
ராமசாமி நகர், ருத்ரப்ப நகர் வழியாக இயக்கப்படும் மினி பஸ்களின் எண்ணிக்கையும் தேவையான அளவில் இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமப்படுகின்றனர். உரிய நேரத்தில் வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை.அரசு போக்குவரத்து கழக உடுமலை கிளை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, எலையமுத்தூர் சாலை வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.




Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி