×

பிளக்ஸ் பேனர் கிழிப்பு ஒருவர் கைது

கோவை, செப்.26:  கோவை செல்வபுரம் நேரு காலனியில் குடியிருப்பு சங்கங்கள் சார்பில் அப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சி தொடர்பான பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ேடாரின் புகைப்படமும் இடம் பெற்று இருந்தது. இந்த பேனரை மர்மநபர்கள் ஒருவர் நேற்று முன்தினம் கிழித்தார். இதுதொடர்பாக செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அங்குள்ள இடங்களில் பதிவாகியிருந்த சிசிடிவி காமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் பேனரை கிழித்தவர் செல்வபுரத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் எனத்தெரியவந்தது. இதையடுத்து சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தையில் திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விக்னேஷ்வரனை கைது செய்தனர்.



Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்