கரும்பு ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

உளுந்தூர்பேட்டை, செப். 26:  உளுந்தூர்பேட்டை அருகே சேலம் ரோடு பிரிவு சாலை அருகில் நேற்று வேப்பூரில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரி திடீரென சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் ஏற்றி வரப்பட்ட கரும்பு சாலையின் நடுவே சரிந்தது. இதன் காரணமாக உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற உளுந்தூர்பேட்டை காவல்நிலைய போலீசார் கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தில் கரும்பு லோடு லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் குமார் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: