விழுப்புரம், செப். 26: போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி பென்சன் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். 13வது ஊதிய ஒப்பந்த உயர்வை உடனடியாக ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் விழுப்புரம் தலைமை
அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில நிர்வாக குழு சம்மந்தம் தலைமை தாங்கினார். சேஷையன், பழமலை, சின்னராசு, கலியமூர்த்தி, பலராமன், கணேசன், பிச்சாண்டி, சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் கோவிந்தசாமி, இமயவர்மன், சகாதேவன், லட்சுமி