புகையிலை பொருட்கள் விற்ற 15 பேர் மீது போலீசார் வழக்கு

உளுந்தூர்பேட்டை, செப். 26: உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, எடைக்கல் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மாணிக்கம், ஏழுமலை, அகிலன் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆசனூர், ஷேக்உசேன்பேட்டை, உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, எறையூர் உள்ளிட்ட

சுற்றியுள்ள கிராமங்களில் மளிகை கடைகள், சாலை ஓர கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் பதுக்கி வைத்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை

செய்தனர்.

Related Stories: