விஷம் குடித்து மூதாட்டி சாவு

ரிஷிவந்தியம், செப். 26: திருக்கோவிலூர் அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (65). இவரது மனைவி லட்சுமி காந்தம் (60). இருவர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். லட்சுமி காந்தம் கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி, தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்ற லட்சுமிகாந்தம் விஷ தழையை அரைத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மயங்கி கிடந்தார். கணவர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கெண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அங்கமுத்து அளித்த புகாரின்பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: