புதுச்சேரி, செப். 26: புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு, அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. நாராயணசாமி முதல்வர் பதவியை வைத்துக் கொண்டு மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார். மத்திய அரசின் ஏஜெண்ட் போல செயல்படும் கவர்னர், மக்கள் நலத்திட்டங்களை தடுக்கத்தான் ெசய்வார். அதை மீறி தான் செய்தாக வேண்டும். செய்ய முடியாவிட்டால் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும். பல்வேறு அமைச்சர்களுக்குள் ஒற்றுமை இல்லை. சட்டமன்ற குழுக்களை முடக்கும் வகையில் சட்டசபை செயலர் செயல்படுகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழக்கும் சூழல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.