மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

புதுச்சேரி, செப். 26: புதுவை மின்துறை நகர இயக்குதல் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுவை மின்துறை கோட்டம் நகரம் இயக்குதல் மற்றும் பராமரிப்புக்கு உட்பட்ட உதவி பொறியாளர்/ மரப்பாலத்திற்கு உட்பட்ட முருங்கப்பாக்கத்தின் கீழ் வரும் மின்நுகர்வோர்களுக்காக மட்டும் பொதுமக்கள் குறைகேட்பு மற்றும் கலந்துரையாடல் வரும் 27ம் தேதி (நாளை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முருங்கப்பாக்கம் வில்லியனூர் மெயின் ரோட்டில் உள்ள திரவுபதியம்மன் கோயில் அருகே உள்ள இளநிலை பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இதில் முருங்கப்பாக்கம், நைனார்மண்டபம், பாப்பாஞ்சாவடி, ஒட்டம்பாளையம், கொம்பாக்கம், சுதானாநகர், வேல்ராம்பட்டு, அங்காளம்மன்நகர், கணபதி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள் மட்டும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: