×

அரியலூரில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

அரியலூர்,செப்,26:அரியலூரில் தி.க சார்பில் பெரியாரை தொடர்ந்து இழிவு செய்யும் சமூக விரோதிகளை கைது செய்யகோரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டண ஆர்பாட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், எம்ஜிஆர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றனர். பெரியார் குறித்தும் அவரது கருத்துகளையும் இழிவு செய்யும் வகையில் தொடர்ந்து ஈடுபடும் சமூக விரோத கும்பலை கண்டிக்கும் வகையிலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் தி.க சார்பில் நடைபெற்ற கண்டண ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தி.க தலைவர் விடுதலை நீலமேகம் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாநில தி.மு.க இளைஞரணி இணை செயலாளர் சுபா.சந்திரசேகர்,  ம.தி.மு.க மாவட்ட செயலாளர் சின்னப்பா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு நிர்வாகி துரைசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணை செயலாளர் அன்பானந்தம். எம்.ஜி.ஆர் அமைப்பு செயலாளர் கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டண உரையாற்றினர்.

Tags :
× RELATED அரியலூரில் வியாபாரிகள் மறியல்