×

அரியலூர் மாவட்டத்தில் 28ம் தேதி வருவாய் திட்ட முகாம்

அரியலூர்,செப்.26: அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஆறாவது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் வருவாய் திட்ட முகாம் வருகிற 28ம் தேதி தாசில்தார்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
அரியலூர் வட்டத்தில் ஆண்டிப்பட்டாகாடு, அரியலூர் (தெ) ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் தத்தனூர் (மே), தண்டலை ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் கிளிமங்கலம் கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் அழகாபுரம் கிராமத்திலும் நடைபெறுகிறது. இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பயன்பெறுமாறு அரியலூர்  மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
× RELATED செட்டிகுளத்தில் மயில் வாகனத்தில் தண்டாயுதபாணி சுவாமி திருவீதியுலா