திருப்பரங்குன்றம் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.24 லட்சம்

திருப்பரங்குன்றம், செப். 26:  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் உண்டியல்களில் போடும் காணிக்கைகள் மாதம் ஒருமுறை எண்ணப்படும். இதன்படி, ஆக.12ம் தேதி முதல் செப்.25ம் தேதி வரை பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளை எண்ணும் பணி,  கோயில் துணை ஆணையர் (பொ) மாரிமுத்து, கண்காணிப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இப்பணியில் கோயில் ஊழியர்களும், மாணவர்களும் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கையாக 449 கிராம் தங்கம், ஒரு கிலோ 590 கிராம் வெள்ளி மற்றும் ரொக்கமாக 24 லட்சத்து, 16 ஆயிரத்து 269 ரூபாய் இருந்தது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: