பழநியில் வீட்டிற்குள் புகுந்தது நாகபாம்பு

பழநி, செப். 26:  பழநியில் வீட்டிற்குள் புகுந்த நாகபாம்பை தீயணைப்புப்படையினர் உயிருடன் பிடித்தனர்.பழநி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மாசானியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மயில்வாகனன். இவரது வீட்டிற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 5 அடி நீளமுள்ள நாகபாம்பு புகுந்து விட்டது. அங்குள்ள கட்டுமான பொருட்களுக்குள் புகுந்த பாம்பு அடிக்கடி வெளியே வந்து வீட்டில் உள்ளவர்களை அலற வைத்து வந்துள்ளது. இதுகுறித்து மயில்வாகனன் பழநி தீயணைப்புப்படையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப்படையினர் நாகபாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பாம்பை அடர் வனப்பகுதிக்குள் விட்டனர்.

Related Stories: