மேல்நிலை தொட்டி பூமிபூஜை

ஒட்டன்சத்திரம், செப். 26:  ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டி ஊராட்சிக்குட்பட்டது பெயில்நாயக்கன்பட்டி கிராமம். இங்கு ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான பூமிபூஜையில் எம்எல்ஏ அர.சக்கரபாணி கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் ப.வெள்ளைச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ்,  பெயில்நாயக்கன்பட்டி திருஞானம்,  மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Related Stories: