ஒட்டன்சத்திரம், செப். 26: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு, மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கட்சி சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி ஒன்றியம் அம்மாபட்டியை சேர்ந்த கருப்பணன், கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையை அர.சக்கரபாணி எம்எல்ஏ வழங்கினார். உடன் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஊராட்சி செயலாளர் தங்கராஜ், பெரியசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.