இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பழநி, செப். 26:  பழநியில் கொட்டும் மழையில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழநி ஜமாஅத் பள்ளிவாசல் சொத்தை தனியாருக்கு வழங்கியதாகக்கூறி வக்ப்போர்டு தலைவர் அன்வர்ராஜா மற்றும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யக்கோரி பழநி குளத்து பைபாஸ் ரவுண்டானா அருகில் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்று மாலை கொட்டும் மழையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமுமுக நகரத் தலைவர் ஜாபர் தலைமை வகித்தார். மௌலவி பீர் முகமது கிராஅத் ஓதினார். மனித நேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் இப்ராகீம் தொகுப்புரையாற்றினார். இந்திய தேசிய லீக் பார்ட்டி நிர்வாகி அசரப் அலி வரவேற்று பேசினார். மனித நேய ஜனநாயக கட்சி சாந்து முகமது, எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் கைசர், தமுமுக மாவட்டத் தலைவர் பாரூக் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமுமுக நகர துணைத் தலைவர் சேக்மைதீன் நன்றி கூறினார்.

Related Stories: