நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

கழுகுமலை, செப் 26: கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் கடந்த 24ம் தேதி முதல் 30ம் தேதி  வரை கழுகுமலை பசும்பொன் நகர், வின்சென்ட் நகர், அம்பேத்கர் நகர், இந்திரபிரஸ்தம் தெரு ஆகிய இடங்களில் 7 நாட்கள் நடக்கிறது.  முகாமின் துவக்க நாளில்  பசும்பொன் நகரில் மரக்கன்று நடும் விழாவிற்கு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சீதா மகேஸ்வரி தலைமை வகித்தார். தொழிலதிபர் ஜோசப் ரத்தினம் முன்னிலை வகித்தார். கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பால்ச்சாமி வரவேற்றார். உதவித் தலைமை ஆசிரியர் செல்லையா, ராஜ், பிரேமா, தொழிலதிபர்கள் ஜான் பீட்டர், முத்துராஜ், ரமேஷ், மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும், ஊர்மக்களும் பங்கேற்று வின்சென்ட் நகர் பகுதியிலும் துப்புரவு பணிகள் மேற்கொண்டதனர். பொன்ராஜ் பாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories: