வேலூர், செப்.26: ஷேர்மார்கெட்டில் முதலீடு செய்து அதிக பணம் தருவதாக கூறி ₹88,500 மோசடி செய்ததாக கூறி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துகுமார்(36) வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் மூலமாக நாட்றம்பள்ளியை சேர்ந்த தரணி என்பவர் எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். அவர் என்னிடம், நான் ஷேர்மார்கெட்டில் முதலீடு செய்துள்ளேன். நீங்கள் கொடுக்கும் பணத்தை சில மாதங்களிலேயே இரட்டிப்பாக்கி கொடுக்கிறேன் என்று கூறினார்.