×

27ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி, செப்.25: திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்கூட்டம் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும். அதன்படி செப்டம்பர் 28ம் தேதி நடைபெற திட்டமிட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் முன்னதாக வருகிற 27ம்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் கூட்டமன்றத்தில நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு