×

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீத்தடுப்புமுறை செயல்விளக்கம்

மண்ணச்சநல்லூர், செப்.25: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் ரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்களால் தீத்தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரங்கம் தீயணைப்பு நிலைய வீரர் லியோஜோசப் கலந்துகொண்டு சமையல்எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக கையாள்வது எப்படி? தீயின் வகைகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, தீக்காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து செயல்விளக்கம் அளித்து பல்வேறு தகவல்களை கூறினர்.  நிகழ்ச்சியில் சமயபுரம் கோயில் இணை ஆணையர் குமரதுரை, கோயில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி