திருத்துறைப்பூண்டி, செப்.25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாமணி அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்கவிழா நடைபெற்றது. தலைமையாசிரியர் அன்புசெல்வன் தலைமை வகித்தார்.என்எஸ்எஸ் அலுவலர் முருகேசன் வரவேற்றார். டாக்டர் ராஜா துவக்கி வைத்து பேசினார்.இதில் பெற்றோர் ஆசியர் கழக தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.