மன்னார்குடி,செப்.25: பொது மக்களின் நலனுக்கு எதிரான ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யும் உரிமத்தை மத்திய அரசு அனுமதிக்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரி வித்து மன்னார்குடி தாலுக்கா மருந்து வணிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யும் உரிமத்தை மத்திய அரசு அனுமதிக்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் வருகிற 28 ம் தேதி மருந்து வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்நிலையில் மக்கள் நலன் கருதி நடைபெறும் இப்போராட்டத்திற்கு பொது மக்களின் ஆதரவை பெற வேண்டியும், மருந்து வணிகர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கங்களை சேர்ந்த மருந்து வணிகர்கள் வரும் 28 ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவது என முடிவெடுத்துள்ளனர்.