கொத்தனார் கொலை சம்பவம் 2 பேர் மீது வழக்குப்பதிவு

திருக்காட்டுப்பள்ளி, செப். 25:  திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு மேலத்தெருவை சேர்ந்த கொத்தனார் மணிகண்டன் (எ) மணிவண்ணன் (44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வயலில் நாற்றங்காலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இந்நிலையில் பிள்ளைவாய்க்கால் தென்கரையில் சங்கராம்பாடி என்ற இடத்தில் கழுத்து அறுப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் அவரது உறவினர் பிரபாகரன் புகார் செய்தார். அதில் மணிவண்ணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகன்(எ) மோகனவேல் என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்தது. இதனால் மணிவண்ணன் கொலை செய்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பழனிமுத்து வழக்குப்பதிந்து மோகன் மற்றும் இதில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் மோகனின் அக்கா மகன் அரவிந்த் ஆகியோரை தேடி வருகின்றனர்.  இறந்த மணிவண்ணனின் மனைவி இந்திரா கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு மணிமாறன் என்ற மகனும், இலக்கியா, காவியா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

Related Stories: