திருவிடைமருதூர், செப். 25: திருவிடைமருதூர் அருகே உள்ள சீனிவாசநல்லூரை சேர்ந்தவர் ராஜா. ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரது மகன் யுவராஜ் (21). மயிலாடுதுறையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் மலையப்பநல்லூர் அரசலாற்றில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் யுவராஜ் மூழ்கினார். இதையடுத்து அவரை மீட்டு கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனினறி யுவராஜ் இறந்தார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.