திருவையாறு, செப். 25: திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி பகுதியில் நகர் ஊரக அமைப்புத்துறை தொழில்நுட்ப அனுமதி மற்றும் பேரூராட்சியில் உள்ளாட்சி அனுமதி பெறாத மனைப்பிரிவுகளில் 1.1.1980க்கு பின்னர் 20.10.2016 முன்னர் மனை வாங்கிய பொதுமக்களின் நலன்கருதி அனுமதி பெறாத மனைகள் வரன்முறை செய்து கொள்ள ஏதுவாக தகவல் மற்றும் சேவை மையம் துவங்கப்பட்டது. செயல் அலுவலர் குகன் துவக்கி வைத்தார். இந்த தகவல் மற்றும் சேவை மையத்தில் விண்ணப்பம் வழங்குதல், ஆன்லைன் பதிவு சேவை நடக்கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி நவம்பர் 3ம் தேதிக்குகள் மனைகள், மனைப்பிரிவுகளை வரன்முறை செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு வரன்முறை செய்யப்படாத மனைகளை விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்ய இயலாது. அவற்றில் வீடு கட்ட கட்டிட அனுமதி பெற இயலாது. மேலும் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு பெற இயலாது என்று செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.