×

சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், செப்.25: கரூர் காமராஜபுரம் வடக்குத்தெருவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தினை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் வடக்குத்தெரு பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஜவுளி நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இதனால் காமராஜபுரம் வடக்குத்தெரு சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்த சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக, அனைத்து வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, இந்த பள்ளத்தினை சரி செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கரூர் சர்ச் கார்னர் பகுதியில் இருந்து ஐந்து ரோடு செல்லும் சாலையில் தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை நிரந்தரமாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...