×

மக்கள் குறைதீர் கூட்டம் 251 மனுக்கள் குவிந்தன

கரூர், செப்.25: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். பல்வேறு உதவித்தொகைகள், அடிப்படைவசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 251 மனுக்கள் அளிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனே நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.  மேலும் பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், தனித்துணை கலெக்டர் குமரேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு