சென்னை: சென்ட்ரல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பல்லவ் மொஹாபத்ரா பதவியேற்றுள்ளார். இவர் 1983ல் பாரத ஸ்டேட் வங்கியில் புரோபஷனரி அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அந்த வங்கியில் கடந்த 25 வருடங்களாக பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த இவரை, சென்ட்ரல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக கடந்த 21ம் தேதி பதவியேற்று உள்ளார்.