உடல் முழுவதும் காயங்களுடன் சேத்துப்பட்டு ஏட்டு மர்ம மரணம்: காவல் நிலையத்தில் மகன் பரபரப்பு புகார்

ெசன்னை: உடல் முழுவதும் காயங்களுடன் சேத்துப்பட்டு தலைமை காவலர் உயிரிழந்ததால், அவரது இறப்பில்  மர்ம உள்ளதாக மகன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை மயிலாப்புர் ஆர்.கே.சாலையில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் நீலமேகம் (47). இவர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வந்தார். ேநற்று முன்தினம் காலை மது  அருந்திவிட்டு தள்ளாடிய படியே வீட்டிற்கு வந்து படுத்து விட்டதாக கூறப்படுகிறது. அப்போது, உடல் முழுவதும் காயங்களுடன் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த அவரது மகன் நிர்மல் (21)  இரவு 7 மணிக்கு உணவு சாப்பிடுவதற்காக தனது தந்தையை எழுப்பி உள்ளார்.

அப்போது, நீலமேகம் எழுந்திருக்க வில்லை. கை மற்றும் கால்களில் காயங்கள் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த நிர்மல் தனது தாய் மற்றும் தங்கை உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர். அங்கு நீலமேகத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி கூறினார். அதன்படி, நிர்மல் தனது தந்தையை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர். அவர்கள் பரிசோதனை செய்த போது நீலமேகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மல் தனது தந்தை இறப்பில் மர்ம உள்ளதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார்.

அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகளவில் மது குடித்ததால் உயிரிழந்தாரா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி  வருகின்றனர். உடல்முழுவதும் காயங்கள் இருப்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தலைமை காவலர் கொலை செய்யப்பட்டாரா அல்லது மதுவால் உயிரிழந்தாரா என்பது குறித்து தெரியவரும் என்று  போலீசார் தெரிவித்தனர். காவலர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: