இடைப்பாடி அருகே இடி தாக்கி விசைத்தறிக்கூடம் சேதம்

இடைப்பாடி, செப்.25: இடைப்பாடி அருகே, இடி தாக்கி விசைத்தறிக்கூடத்தில் பாவாலை முற்றிலும் எரிந்து நாசமானது. இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதில் சித்தூர் ஊராட்சி எல்லக்குட்டூரில் பலத்த இடியுடன் மழை கொட்டியது. இதில் ராஜாமணி என்பவர் நடத்தி வரும் விசைத்தறி கூடத்தில் இடி தாக்கியது. இதில் தீபற்றி எரிந்து பாவாலை நாசமானது. மேலும் விசைத்தறிக்கூடமும் சேதமானது. தகவலின் பேரில் விஏஓ ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Related Stories: