மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

வாழப்பாடி, செப்.25:  ரபேல் ஊழல் விவகாரத்தில் மத்திய பாஜ அரசு பதவி விலகக்கோரி, வாழப்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர்.வாழப்பாடி காமராஜர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மத்திய பாஜ ஆட்சியில்  நடைபெற்ற ரபேல் விமான ஊழலை கண்டித்தும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும், சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்,  மாவட்ட  தலைவர் அர்த்தனாரி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. நகரத் தலைவர் ரவிமணி வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் முனுசாமி, ராஜா, மாவட்ட பொருளாளர் ஒசுமணி, வட்டார தலைவர் ராஜாராம் முன்னிலை முன்னிலை வகித்தனர். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வாழப்பாடி ராமசுகந்தன், மேற்கு மாவட்ட தலைவர் முருகன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் அணையரசு, மாநில பேச்சாளர் மகாதேவன் ஆகியோர் பேசினர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, வட்டார காங்கிரஸ் துணை தலைவர் பெரியதம்பி, மகிளா காங்கிரஸ் துணை தலைவர்கள் கவிதா, சாரதாதேவி, முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராமசுகந்தன் பேசினார். முன்னதாக, அவர் இந்திராகாந்தி உருவசிலைக்கு மாலை அணிவித்து மகிளா காங்கிரஸ் கொடியேற்றினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் கணேசன், திருச்செல்வன், பாலா, ஆனந்தன், பிரபாகரன், முரளிதரன், மனோஜ்குமார், கருப்பண்ணன், மகாலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செந்நிலவன் நன்றி கூறினார்.

Related Stories: