×

கலெக்டரிடம் மனு குண்டாசில் 2 பேர் கைது

சிவகங்கை, செப்.25:திருப்புவனம் அருகே பாப்பாகுடியை சேர்ந்தவர் பூபதி(எ)முருகபூபதி(28). இவர் மீது மணல் கடத்தலில் ஈடுபட்டதாக பூவந்தி போலீஸ் ஸ்டேசனில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வாகைக்குடிபுதூரை சேர்ந்தவர் ஆனந்த். இவர் மீது கல்லல் போலீஸ் ஸ்டேசனில் வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி ஜெயச்சந்திரன், கலெக்டர் ஜெயகாந்தனுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதால், இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.



Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்