×

எரிபொருள் சிக்கனம் சைக்கிள் பேரணி

காரைக்குடி, செப்.25: காரைக்குடி எஸ்எம்எஸ்வி பள்ளி என்எஸ்எஸ், ரோட்டரி கிளப் ஆப் பியர்ல்ஸ் சங்கமம் மற்றும் சாலை பாதுகாப்பு படை சார்பில்  எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடந்தது. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் முத்துக்குமார் வரவேற்றார். ரோட்டரி பியர்ல்ஸ் சங்க பட்டைய தலைவர் நாச்சியப்பன் தலைமை வகித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரத்தினம் துவக்கி வைத்தார். சாலை பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன் முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துக்குமார், என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் சீனிவாசன், எஸ்.ஐ சேக்மகபுபாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி கொப்புடையநாயகி அம்மன் கோவில் அருகே துவங்கி செகன்ட்பீட், ஐந்து விளக்கு வழியாக புதிய பஸ் ஸ்டாண்டு அடைந்தது. 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்