காளையார்கோவில், செப். 25: காளையார்கோவிலில் திருக்கானப்பேரூரார் கலைக்களஞ்சியம் மற்றும் சுவாமி விவேகானந்தா யோக ஸ்கேட்டிங் கழகம் இணைந்து யோகாவில் உலக சாதனை முயற்சியை நடத்தியது. இதில் 9ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா 30 நிமிடங்களில் 500 ஆசனங்கள் செய்யும் முயற்சியினை மேற்கொண்டார். இதில் மாணவி ஐஸ்வர்யா 29 நிமிடத்தில் 500 யோக ஆசனங்களை செய்து முடித்ததை உலக சாதனைக்கு பரிந்துரை
செய்யப்பட்டது.