உசிலம்பட்டி, செப். 25: எழுமலை அருகே உள்ள இ.கோபாலபுரம் கிராமத்தில், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின், நாட்டுநலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சாம்பிரசாத் ராஜா தலைமை வகித்தார்.என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் முத்துக்குமார், ஆசிரியர்கள் சண்முகராஜா, காயத்ரி, முதுகலை ஆசிரியர் ஸ்டாலின்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இதனையொட்டி, கோபாலபுரத்தில் உள்ள பள்ளிக்கூடம், பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள குப்பைகள் மற்றும் பாலீத்தீன் பைகளை மாணவர்கள் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். வருகிற 30ம் தேதி வரை நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.