தற்கொலைக்கு முயன்ற தச்சுத்தொழிலாளி

திருமங்கலம், செப். 25: விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச்  சேர்ந்தவர் ராமமூர்த்தி (44). தச்சு தொழிலாளியான இவர், மனைவியை பிரிந்து  வாழ்கிறார். இதனால், மனமுடைந்த அவர், நேற்று காலை திருமங்கலம்  ரயில்நிலையத்திற்கு வந்து காத்திருந்தார். அப்போது பாலக்காட்டிலிருந்து  திருச்செந்துாருக்கு செல்லும் ரயில் முன் பாய முயன்றார்.அருகில்  இருந்தவர்கள் அவரை பிடித்து இழுத்தனர். இதில், ரயிலில் லேசாக மோதியதால்,  அவரது தலையில் காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டிரைவர் ரயிலை மெதுவாக  இயக்கியதால், ராமமூர்த்தி லேசான காயத்துடன் தப்பினார். இந்த சம்பவம்  ரயில்நிலையத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது

Related Stories: