கண்டன ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி, செப். 25: பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, உசிலம்பட்டி பஸ்நிலையம் எதிரே, அகில இந்திய பார்வாட் பிளாக் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர்கள் மலர்க்கொடி, ஆதிசேடன், பால்பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: