நான்கு பேர் கைது

மதுரை, செப். 25: மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் புதூர் போலீசார் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த மதன்குமார் (23), மதுரை மூலக்கரையை சேர்ந்த கார்த்திகேயன் (41), சர்வேயர் காலனியை சேர்ந்த சிவா (25), மேலமடையை சேர்ந்த 19 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், ரூ.6 ஆயிரத்து 800ஐ பறிமுதல் செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 வெளிமாநில பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: