மதுரையைச் சேர்ந்த 2 வக்கீல்கள் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வு

மதுரை, செப். 25: மதுரையைச் சேர்ந்த 2 வக்கீல்கள், தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, 25 உறுப்பினர்களை தேர்வு செய்ய,கடந்த மார்ச் 28ல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 192 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக நடைபெற்று, ேநற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. இதில், ஐகோர்ட் மதுரை கிளை வக்கீல் ஜி.தாளைமுத்தரசு, இரண்டாம் முறையாக பார் கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றும் பி.அசோக்கும் பார் கவுன்சில் உறுப்பினராக தேர்வானார். மொத்தமுள்ள 25 உறுப்பினர்களில் மதுரையைச் சேர்ந்த வக்கீல்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வக்கீல்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: