கருணாஸ் கைதை கண்டித்து நூதன போராட்டம்

மதுரை, செப். 25: முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, போலீசார் மற்றும் முதல்வரை அவதூறாக பேசியதாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் தங்கவிருமன் தலைமையில், அக்கட்சியினர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில், ‘பேச்சுரிமையை பறிக்காதே, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக வழக்கு போடாதே என கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.தங்கவிருமன் கூறுகையில், ‘‘சபாநாயகர் அனுமதியின்றி எம்எல்ஏ கருணாசை கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கதக்கது. பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும், எஸ்வி சேகருக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?’’ என்றார். இது குறித்த மனுவை கலெக்டர் நடராஜனிடம் வழங்கிச் சென்றனர்.

Related Stories: