வாக்காளர் சேர்க்கைக்கு 31,210 பேர் மனு

மதுரை, செப். 25: மதுரை மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை, நீக்க, திருத்த முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்காளர் சேர்க்கைக்காக படிவம் 6ஐ, 15 ஆயிரத்து 546 பேர் வழங்கியுள்ளனர். பெயரை நீக்க கோரி படிவம்-7ஐ, ஆயிரத்து 276 பேரும், பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் கோரி படிவம்-8ஐ ஆயிரத்து 108 பேரும் கொடுத்துள்ளனர். ஒரே தொகுதிக்குள் முகவரியை மாற்றம் செய்து தரக்கோரி படிவம்-8ஏவை, ஆயிரத்து 247 பேர் கொடுத்துள்ளனர். மொத்தம் 19 ஆயிரத்து 197 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே, கடந்த 9ம் தேதி நடந்த சிறப்பு முகாமில், மொத்தம் 18,541 பேர் மனு கொடுத்திருந்தனர். இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 718 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், வாக்காளர் சேர்க்கைக்கு மட்டும் 31 ஆயிரத்து 210 பேர் மனு கொடுத்துள்ளனர்.

Related Stories: